ஆர்.கே.நகர் தேர்தல்: கண்காணிப்புக்கு துணை ராணுவப்படை அழைப்பு

ஆர்.கே.நகர் தேர்தல்: கண்காணிப்புக்கு துணை ராணுவப்படை அழைப்பு

ஆர்.கே.நகர் தேர்தல்: கண்காணிப்புக்கு துணை ராணுவப்படை அழைப்பு
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படையின் 20 கம்பெனிகள் வரவழைக்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் காலியாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிச.21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தற்போது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு பரிசீலனை நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் டிசம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையின் 20 கம்பெனிகள் தமிழகம் வர உள்ளனர். அன்றிலிருந்து வாக்கு எண்ணிக்கை வரை பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com