ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 82 வேட்பு மனுக்கள் ஏற்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 82 வேட்பு மனுக்கள் ஏற்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 82 வேட்பு மனுக்கள் ஏற்பு
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மொ‌த்தம் 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர், மனுக்கள் மீதான பரிசீலனை பொதுப் பார்வையாளர் பிரவீன் பிரகாஷ் ஐஏஎஸ் முன்னிலையில் நடைபெற்றது.இதில் ‌திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன்,அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் மதுசூதனன்,எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையின் செயலாளர் தீபா,தேமுக வேட்பாளர் மதிவானன்,பாஜக வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட 82 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 45 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற 27 ஆம் தேதி கடைசி நாளாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com