ஆர்கே நகர் தேர்தல் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

ஆர்கே நகர் தேர்தல் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

ஆர்கே நகர் தேர்தல் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

கடந்த 21ஆம் தேதி ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 258 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சென்னை ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த கல்லூரியில் தற்போது 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளில் நிறைவு பெறும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  வாக்கு எண்ணிக்கை வீடியோ மூலமாகவும், வெப் கேமரா மூலமாகவும் பதிவு செய்யப்பட உள்ளன.  வாக்கு எண்ணிக்கைகள் நேர்மையாக நடத்தப்படும் என்றும், முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com