'இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றி'... ஆர்.ஜே. பாலாஜி

'இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றி'... ஆர்.ஜே. பாலாஜி

'இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றி'... ஆர்.ஜே. பாலாஜி
Published on

ஜல்லிக்கட்டு தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இளைஞர்களின் அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு‌ காவல்துறை அறிவித்தனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் கலைய மறுத்ததை அடுத்து காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் ஒரு சில பகுதிகளில் சாலைமறியல், வாகன எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றது.

இந்நிலையில் ரேடியோ தொகுப்பாளரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி, அனைவரும் போராட்டத்தை கைவிடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது இளைஞர்களின் அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com