தேனியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களிடம் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக பள்ளி மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
தேவாரத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் அண்மையில் தலைமை ஆசிரியராக பதவி ஏற்றவர் ஜெயசந்திரன். இவர் அப்பள்ளியில் படிக்கும் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாகவும், செய்யாத தவறுக்கு தண்டனை வழங்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மேலும் இந்த புகாரை உடனடியாக விசாரிக்கும் படி மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்ரவிட்டுள்ளார். பாகுபாடு இன்றி நடந்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியர்களே இவ்வாறு நடந்துக் கொள்வது மனதிற்கு வேதனை அளிப்பதாகவும், பள்ளிகளுக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளின் நிலைமை நினைத்து கவலை அடைவதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.