திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வாணியம்பாடி மண்டி தெருவில் பாபு என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் ஆய்வு நடத்தினார். அப்போது கடையில் 14 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தை தொழிலாளர் நல அலுவலரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டார்.