கூவத்தூரில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு; தர்ணா போராட்டம்

கூவத்தூரில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு; தர்ணா போராட்டம்

கூவத்தூரில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு; தர்ணா போராட்டம்
Published on

கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை அதிமுக-வினர் உடைப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளாக கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள விடுதி அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அதிமுக-வினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து வைத்துள்ளதாவும், கேமரா உட்ளிட்ட உபகரணங்களை உடைப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com