ஆறுமுகசாமி ஆணையம் குறித்த கருத்தை நீக்க சொன்ன ஓ.பி.எஸ்: மறுப்பு தெரிவித்த துணை சபாநாயகர்!

ஆறுமுகசாமி ஆணையம் குறித்த கருத்தை நீக்க சொன்ன ஓ.பி.எஸ்: மறுப்பு தெரிவித்த துணை சபாநாயகர்!
ஆறுமுகசாமி ஆணையம் குறித்த கருத்தை நீக்க சொன்ன ஓ.பி.எஸ்: மறுப்பு தெரிவித்த துணை சபாநாயகர்!

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான முதல் நாள் விவாதம் இன்று நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆறுமுகசாமி ஆணையம் குறித்து திமுக உறுப்பினர் மார்க்கெண்டேயன் கூறிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

அதற்கு, உறுப்பினர் மேலோட்டமாகத்தான் பேசினார் என்பதால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை என சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்தார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவையில் விவாதிக்கக் கூடாது என்பது விதியாக இருந்தாலும் பெயரைக் குறிப்பிடாமல் வழக்கின் தன்மை குறித்து பேசலாம் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com