சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை

நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மூவர்ண கொடியை ஏற்றி வைப்பதுடன், அணி வகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொள்ளவிருக்கிறார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, 3 தினங்கள் நடைபெறுவது வழக்கம். இன்றும் வரும் 10, 2 ஆகிய தேதிகளிலும் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலாவது நாளாக இன்று நடந்த ஒத்திகையில், கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள், தேசிய மாணவர் படை மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். மேலும், முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதை போலவும், ஒத்திகை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com