சேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு

சேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு
சேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு

வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 3 வயது ஆண்குழந்தை கடத்தப்பட்ட சில மணி நேரங்களில் மீட்கப்பட்டுள்ளது. 

சேலம் முள்ளாக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது 3 வயது மகனான யோகேஷ்வரன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணமல் போனதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுவனை காணவில்லை. 

அப்போது இருச்சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் யோகேஷ்வரனை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் குழந்தை கடத்தல் வழக்கு விசாரிக்கப்பட்டது. 

குழந்தை கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கடத்தப்பட்ட குழந்தையை விட்டு சென்றதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பின்னர், குழந்தையை மீட்ட காவல்துறையினர் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com