”காடுகள் ஆக்கிரமிப்பை நிரூபித்தால் நாட்டை விட்டு வெளியேற தயார்” - ஜகி வாசுதேவ் ஆவேசம்

”காடுகள் ஆக்கிரமிப்பை நிரூபித்தால் நாட்டை விட்டு வெளியேற தயார்” - ஜகி வாசுதேவ் ஆவேசம்
”காடுகள் ஆக்கிரமிப்பை நிரூபித்தால் நாட்டை விட்டு வெளியேற தயார்” - ஜகி வாசுதேவ் ஆவேசம்

சென்னையில் நடிகர் சந்தானத்துடன் உரையாடிய ஈஷா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ், ஒரு அங்குலம் அளவு கூட காடுகளை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும் அதனை யாராவது நிரூபித்துவிட்டால் நாட்டை விட்டு வெளியேறத் தயார் என்றும் கூறினார். 

தமிழக கோயில்களை அரசிடம் இருந்து பெற்று பக்தர்களிடம் கொடுக்க வேண்டும் என ஜகி வாசுதேவ் சில தினங்களுக்கு முன்பு ட்விட் செய்த நிலையில், அதற்கு நடிகர் சந்தானம் ட்விட்டரில் ஆதரவு தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், சென்னையில் இது தொடர்பாக கருத்து பரிமாற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், ஜகி வாசுதேவிடம் விளக்கம் பெறும் வகையில் நடிகர் சந்தானம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதில், ஈஷா யோகா மையம் அமைந்த இடம் குறித்து வினா எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜகிவாசுதேவ், “ ஒரு அங்குலம் அளவு கூட காடுகளை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. காடுகள் ஆக்கிரமிப்பு செய்ததை நிரூபித்துவிட்டால் நாட்டை விட்டு வெளியேறத் தயார்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com