ராமேஸ்வரம்: மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் - 16 தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்: மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் - 16 தமிழக மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்: மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் - 16 தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்களின் இரண்டு விசைப்படகையும் 16 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, அதிர்ச்சியில் மீனவர்கள்.

ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகம் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அதேபோல் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து தற்போது இந்நிலையில், 16 மீனவர்களையும் இரண்டு விசைப்பலகையும் விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்வதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த சில வாரங்களாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்துள்ளது ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com