இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மீனவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து, தங்கச்சிமடத்தில், 7ஆவது நாளாக போராட்டம் நீடித்துவருகிறது. பிரிட்ஜோவின் உடலைப் பெற மறுத்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கச்சிமடத்தில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக மீனவர்களின் போராட்டத்திற்கு ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர்.