\
" எனது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலை விற்க கேரள அரசு அனுமதி”- ராமர் பிள்ளை தகவல்

" எனது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலை விற்க கேரள அரசு அனுமதி”- ராமர் பிள்ளை தகவல்

" எனது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலை விற்க கேரள அரசு அனுமதி”- ராமர் பிள்ளை தகவல்
Published on

தான் கண்டறிந்த மூலிகை பெட்ரோலை கேரள மாநிலத்தில் விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளதாக ராமர் பிள்ளை கூறியுள்ளார்.

மூலிகைப் பெட்ரோல் குறித்து அவ்வப்போது பேசி பரபரப்பு ஏற்படுத்திய ராமர் பிள்ளை தனது மூலிகைப் பெட்ரோலுக்கு தமிழ் தேவி மூலிகை எனப் பெயர் வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கண்டறிந்த மூலிகைப் பெட்ரோலை, கேரள மாநிலத்தில் விற்பனை செய்ய கேரள அரசு அனுமதியளித்துள்ளதாக தெரிவித்தார். இப்பெட்ரோலை விற்பனை செய்ய தனியார் நிறுவனத்திற்கு முழு காப்புரிமையை வழங்கியதாகவும் அதற்கான ராயல்டியை மட்டும் தான் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

(கேரளாவில் மூலிகை பெட்ரோல் விற்பனை செய்ய ராமர் பிள்ளை அங்கீகாரம் அளித்த நிறுவனம்.)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com