ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மேகம், கடல் நீரை உறிஞ்சும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்ததால் குளிர் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் மண்டபம் தெற்கு கடற்கரையில் இன்று காலை மேகம், கடல் நீரை உறிஞ்சும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.