ராமநாதபுரம்: கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
ராமநாதபுரம்: கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு -  போலீசார் விசாரணை

ராமநாதபுரம் அருகே மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். 

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைகுடியில் இருந்து நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்க கார்த்திகேயன், மற்றும் அவரது மகன் வசந்தகுமார் ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது ஐந்து நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நிலை தடுமாறி வசந்தகுமார், படகில் இருந்து கடலில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவரை காப்பாற்றும் முயற்சியில் தந்தை கார்த்திகேயன் மற்றும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருப்பாலைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வசந்தகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. இது குறித்து தேவிபட்டினம் கடலோர காவல் படையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com