ராமநாதபுரம்: புறா பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ராமநாதபுரம்: புறா பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ராமநாதபுரம்: புறா பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புறாவை பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி கிறிஸ்தவ தெருவைச் சேர்ந்த தம்பதி அருள் - தயாமணி. இத்தம்பதியின் மகன் டென்னிஸ் என்ற பூக்கா (16). இவர் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். டென்னிஸ் தனது வீட்டில் புறாக்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் புறா ஒன்று பக்கத்து வீட்டின் மாடிக்கு பறந்து சென்றுள்ளது. அதைப் பிடிப்பதற்காக மாணவன் டென்னிஸ் கையை நீட்டியபோது மேல் பகுதியில் இருந்த உயரழுத்த மின்சார கம்பியின் மீது கை பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எமனேஸ்பரம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com