‘வாழ வழியில்லை’ - தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 15 இலங்கை தமிழர்கள்

‘வாழ வழியில்லை’ - தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 15 இலங்கை தமிழர்கள்

‘வாழ வழியில்லை’ - தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 15 இலங்கை தமிழர்கள்
Published on

இலங்கையில் வாழ வழியின்றி 4 கைக்குழந்தை உட்பட 15 பேர் தனுஷ்கோடி பகுதியில் தஞ்சம் அடைந்தனர். விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அன்றாட அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை கிடுகிடு என உயர்ந்து மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கையில் உள்ள பொது மக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து கடந்த மாதத்திலிருந்து இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி 16 குடும்பத்தை சேர்ந்த 60 நபர்கள் தனுஷ்கோடி பகுதியில் தஞ்சமடைந்ததை அடுத்து அவர்களை உரிய விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் இன்று மேலும் இலங்கையில் இருந்து 4 கைக்குழந்தை உட்பட 5 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் தனுஷ்கோடி அடுத்த இரட்டை தலைப்பகுதியில் ஆபத்தான முறையில் கடல் கடந்து வந்து தஞ்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் உரிய விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com