\
மாநிலங்களவை எம்.பி பதவி: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

மாநிலங்களவை எம்.பி பதவி: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

மாநிலங்களவை எம்.பி பதவி: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்
Published on

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி.பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், செல்வராஜ், பாரதிய ஜனதாவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகியோரின் பதவிக் காலமும், திமுகவின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ரங்கராஜன் ஆகிய ஆறு பேரின் பதவிக் காலமும் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து காலியாகவுள்ள இந்த ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை திமுக அறிவித்தது. ஆனால் அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேர்தலில் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com