”என் அனுமதியில்லாமல் எப்படி மீன் பிடிக்கலாம்..” - இளைஞர்களை கட்டையால் தாக்கிய குத்தகைதாரர்!

ராஜபாளையம் அருகில் கண்மாயில் மீன்பிடித்த நான்கு இளைஞர்களை குத்தகைக்காரர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜபாளையம் அருகே பொழுது போக்கிற்காக கண்மாயில் மீன் பிடித்த நான்கு பேரை தாக்கிய கண்மாய் குத்தகை காரரை கைது செய்தது காவல்துறை.

ராஜபாளையம் அருகே உள்ள மருங்கூர் கண்மாயில் நண்பர்கள் நான்குபேர் பொழுதுபோக்கிற்காக மீன்களை பிடித்துள்ளனர். அந்நேரத்தில், கண்மாயின் குத்தகைகாரரான ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தனது அனுமதியில்லாமல் மீன் பிடித்த நால்வரையும் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனால் காயமுற்ற நால்வரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறை குற்றசெயலில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com