அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு - சட்ட அமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் சிபிஐ விசாரணையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு ஆணை வழங்க வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி எழுதியுள்ள கடிதத்துக்கு, தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதில், கே.சி.வீரமணி மீதான வழக்கில் விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்றும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்குகள் குறித்து அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை எனவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com