3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு (01-12-2017) நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் இன்று காலை ஒகி புயலாக மாறியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. தற்போது ஒகி புயல் கன்னியாகுமரியை விட்டு விலகிச்செல்ல தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (01-12-2017) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com