கிராமங்களை சூழ்ந்துள்ள மழைநீர்: பள்ளிக்கு படகில் பயணிக்கும் மாணவர்கள்

கிராமங்களை சூழ்ந்துள்ள மழைநீர்: பள்ளிக்கு படகில் பயணிக்கும் மாணவர்கள்
கிராமங்களை சூழ்ந்துள்ள மழைநீர்: பள்ளிக்கு படகில் பயணிக்கும் மாணவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கனமழையால் சாலை துண்டிக்கப்பட்டுள்ள வண்டல் கிராமத்திற்கு கூடுதல் படகை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. மழையின் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வண்டல்,‌ குண்டூரான்வெளி கிராமங்களை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. அதனால்,‌‌‌ படகு மூலம் மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி செல்லும் மாணவர்கள் வெள்ளம் வடியும் வரை தங்களுக்காக மேலும் ஒரு படகு இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

150க்கும் அதிகமான மாணவர்கள் இந்த கிராமத்திலிருந்து சென்று வருவதால், ஒரே படகை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால், பள்ளி நேரங்களில் கூடுதலாக ஒரு பெரிய படகை இயக்க மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com