வானிலை முன்னறிவிப்பு: காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்!

வானிலை முன்னறிவிப்பு: காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்!
வானிலை முன்னறிவிப்பு: காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்!

கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, லட்சத்தீவு, கன்னியாகுமரிக்கு இடையே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com