தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
Published on

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, “ 28ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

29-ம் தேதி மற்றும் 30-ம் தேதிகளில் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும். தெற்கு உள் மவ்வட்டங்களில் லேசான மழையும், வடக்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

30ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com