புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Published on

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்கனவே நிலவியிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே புதிதாக காற்‌றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 24 மணி நேரத்தில், தென் தமிழகம், டெல்டா மா‌வட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com