வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Published on

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்தது. காலை முதல் பிற்பகல் வரை இயல்பான வானிலை காணப்பட்ட நிலையில் 3 மணி அளவில் மழை பெய்தது. வடபழனி, நுங்கம்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் போளூரில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சிவகங்கையில் 8 சென்டிமீட்டரும் பேச்சிபாறையில் 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com