அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம்முகநூல்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
டிசம்பரில் வருகிறது புயல்..? முன்கூட்டியே கணிக்கும் பிரதீப் ஜான்!

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட மொத்தம் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெற்ற வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த 15 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம்,கள்ளக்குறீச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கும் நிலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com