ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்-சுத்தம் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி

ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்-சுத்தம் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி
ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்-சுத்தம் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம் ஒன்றை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் திங்கட்கிழமை காலை நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளது. இதையடுத்து ரயில் பராமரிப்பு பணிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. ஊழியர்கள் ரயில் பெட்டியின் உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கதக்க பெண் சடலம் ஒன்று இருந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற ரயில்வே போலீசார் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தாம்பரம் ரயில்வே போலீசார் அழுகிய நிலையில் உயிரிழந்த பெண் யார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com