திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 14 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்  விடிய விடிய நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். டிஎஸ்பி தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இடைத்தரகர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாத வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், மேலும் இரு அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.‌

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com