“சுர்ஜித்தை மீட்க நானும் பிரார்த்தனை செய்கிறேன்” - ராகுல் ட்வீட் 

“சுர்ஜித்தை மீட்க நானும் பிரார்த்தனை செய்கிறேன்” - ராகுல் ட்வீட் 
“சுர்ஜித்தை மீட்க நானும் பிரார்த்தனை செய்கிறேன்” - ராகுல் ட்வீட் 

சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க தானும் பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 46 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாடே தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோர்களுடன் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com