தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 28ஆம் தேதி ராகுல்காந்தி ஆலோசனை

தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 28ஆம் தேதி ராகுல்காந்தி ஆலோசனை
தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 28ஆம் தேதி ராகுல்காந்தி ஆலோசனை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வரும் 28 ஆம் தேதி ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீடு நிகழ்வில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வரும் 28 ஆம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற இருக்கிறது.

இதில், வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். வெற்றி பெற்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும், நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க இருக்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com