ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை - இன்றுடன் தடை முடிவு ?

ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை - இன்றுடன் தடை முடிவு ?
ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை - இன்றுடன் தடை முடிவு ?

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

முன்னதாக ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அத்தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து கடந்த 3ம் தேதி மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்கிடையில் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை 23ம் தேதிவரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com