”இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்”-ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு..சீமான் வரவேற்பு

”இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்”-ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு..சீமான் வரவேற்பு
”இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்”-ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு..சீமான் வரவேற்பு

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் 50 இடங்களில்  ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிடப்பட்டிருந்ததற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ‘’மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன்.

சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்!

இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்'' என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com