
தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் குறையவில்லை. மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரையை அடுத்து, இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல். மே 31 வரை காய்கறி, மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள் இயங்க அனுமதியில்லை.