பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில், இடித்து அகற்ற வேண்டிய நிலையில் உள்ள 66 வகுப்பறை கட்டடங்களின் விவரங்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது, புதிய தலைமுறைக்கு கிடைத்த தகவல்களை அவர் உறுதி செய்தார். அதன்படி, பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களில் 66 வகுப்பறைக் கட்டங்கள் இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் விசாரித்தபோது, பயன்படுத்த தகுதியற்ற கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக விளக்கமளித்தார்.