புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா
Published on

பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா நடைபெறும். ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் மீன்படித் திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கட்டையாண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் மொட்டகுறிச்சி பெரியகன்மாயில் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் குவிந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளைக் கொண்டு லாவகமாக மீன்பிடிக்கத் தொடங்கினர்.

அதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. பிடித்த மீன்களுடன் மகிழ்ச்சியோடு வீட்டிற்குச் சென்ற பொதுமக்கள் மீன்களை வழிபாடு நடத்தி பின்னர் சமைத்து உண்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com