நாய்களின் வெறியாட்டத்தால் பரிதாபமாக பலியான செம்மறி ஆடுகள்

நாய்களின் வெறியாட்டத்தால் பரிதாபமாக பலியான செம்மறி ஆடுகள்
நாய்களின் வெறியாட்டத்தால் பரிதாபமாக பலியான செம்மறி ஆடுகள்

விராலிமலை அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 17 செம்மறி ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மதயானைபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் விராலிமலை அருகே புதுவயல் கிராமத்தில் ஆட்டு கிடை அமைத்து சுமார் 60-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு பின் அடைத்து வைத்துளார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு தெருநய்கள் ஆட்டு கிடைக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியுள்ளது. ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் உள்ளிட்ட குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்தபோது 2 நாய்கள் ஆடுகளை கடித்து கொண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து நாய்களை துரத்தி விட்டு கிடையின் உள்ளே சென்று பார்த்தபோது 17 செம்மறி ஆடுகளை நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது இதில் 17 செம்மறி ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தன. நாய்கள் ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் ஆட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com