புதுக்கோட்டை: கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

புதுக்கோட்டை: கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை
புதுக்கோட்டை: கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

அன்னவாசல் அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ் என்பவரின் மனைவி பவித்ரா (22) நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் அவரை இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புதுக்கோட்டை ராணியர் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பவித்ராவை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டை ராணியர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லும் வழியில் பவித்ராவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

இதனால் நிலைமையை உணர்ந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பூபதிராஜா பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் சாலையோரம் ஆம்புலன்ஸை நிறுத்தி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார். அதில் சுகப்பிரசவமாக பவித்ராவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து தாயும், சேயும் புதுக்கோட்டை ராணியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தக்க நேரத்தில், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பவித்ராவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com