வாங்கிய கடனை கட்ட முடியாததால் கூலித் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு

வாங்கிய கடனை கட்ட முடியாததால் கூலித் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு
வாங்கிய கடனை கட்ட முடியாததால் கூலித் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு

பொன்னமராவதியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி ஊராட்சி பழையவளவு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (எ) சின்னதம்பி (32) கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து செல்வராணி என்ற மனைவியும் பிரதீப் என்ற மூன்று வயது மகனும் பிரதீபா என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இளையராஜா வாங்கிய கடனை கட்ட முடியாமல் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூலங்குடி செட்டிச்சி ஊரணி அருகே உள்ள தைலமரக்காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த நபர்கள் மரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் தூக்கில் தொங்குவதாக பொன்னமராவதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி போலீசார், அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த நபர் இளையராஜா என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக பொன்னமராவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com