\
மாணவர்களை விதவிதமாக வரவேற்கும் ஆசிரியை : மகிழ்ச்சி பெருகும் வகுப்பறை

மாணவர்களை விதவிதமாக வரவேற்கும் ஆசிரியை : மகிழ்ச்சி பெருகும் வகுப்பறை

மாணவர்களை விதவிதமாக வரவேற்கும் ஆசிரியை : மகிழ்ச்சி பெருகும் வகுப்பறை
Published on

புதுச்சேரியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது அணுகுமுறையால் மாணவர்களின் அன்பை பெற்று வருகிறார்.

புதுச்சேரி நோனாங்குப்பத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் தினமும் வரவேற்பு மூலம் மாணவர்களை மகிழ்ச்சியடைய செய்கிறார் ஆசிரியர் ஒருவர். வகுப்பறையின் நுழைவாயிலில் ஒட்டியிருக்கும் 4 தெரிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அவர்களின் தெரிவுப்படி வரவேற்பு அளிக்கிறார் ஆசிரியை சுபாஷினி. அத்துடன் மாணவர்களுக்கு எளிய முறையிலும், அவர்களின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையிலும் பாடம் ‌‌நடத்துவதால் பள்ளிக்கு செல்வதே அவர்களுக்கு இனிப்பான விஷயமாகியுள்ளது.

இந்த ஆசிரியை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரமாக இல்லாமல் மாணவர்களை சுதந்திரமாக, அவர்கள் போக்கில் கற்பித்து ஊக்குவிக்கிறார். மேலும் தனது கற்பிக்கும் முறையால், வகுப்பறையை கலகலப்பாக்கும் தன்மையை கொண்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com