புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உருக்கமான கடிதம்

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உருக்கமான கடிதம்

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உருக்கமான கடிதம்
Published on

மக்களின் நலனுக்காக அதிகப்படியான பணிகளை கொடுத்ததற்காக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கு, மாநில துணைநிலை ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று நாளையுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்களின் நலனுக்காக அதிகமான பணிகளை ராஜ் நிவாஸூக்கு கொடுத்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நிர்வாகத்தை முன்னெடுத்துச் சென்றதற்காக தலைமைச் செயலர் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், மிக அமைதியான புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசிடம் தெரிவித்து, அவற்றைப் பெற தொடர்ந்து வலியுறுத்துவேன் என கிரண்பேடி தெரிவித்துள்ளார். மொழியை அறியாதபோதிலும், மாநில மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ள அவர், புதுச்சேரி வளர்ச்சி என்பது தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் கையிலும் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், மக்கள் தன்மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கிரண்பேடி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com