அதிகாரிகள் சோதனைக்கு செல்வதை சில ஓட்டுநர்கள் முன்கூட்டியே சொல்கிறார்கள்: அமைச்சர் மூர்த்தி

அதிகாரிகள் சோதனைக்கு செல்வதை சில ஓட்டுநர்கள் முன்கூட்டியே சொல்கிறார்கள்: அமைச்சர் மூர்த்தி

அதிகாரிகள் சோதனைக்கு செல்வதை சில ஓட்டுநர்கள் முன்கூட்டியே சொல்கிறார்கள்: அமைச்சர் மூர்த்தி

அரசுக்கும், அதிகாரிக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அறிவுரை வழங்கினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித்துறை அமைசேசர் பி.மூர்த்தி கலந்து கொண்டார். தொடர்ந்து மேடையில் அவர் பேசும்போது...

அரசு அதிகாரிகளுக்கு, அலுவலர்களுக்கு, அமைச்சர்களுக்கு கார் ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டாம், டெஸ்கோ மூலமாக நிரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றனர்.

முதலில் அரசுத்துறை வாகனை ஓட்டுநர்கள் அரசுக்கும் அதிகாரிக்கும் விசுவாசமாக இருக்கிறோமா என்பதை பரிசோதித்து பாருங்கள். அதிகாரிகள் சோதனைக்குச் செல்வதை சில ஓட்டுநர்கள் முன்கூட்டியே சொல்வதாக புகார் வருகிறது. இதனால் ஓட்டுநர்கள் மீது தவறான கண்ணோட்டத்தில் அதிகாரிகள் உள்ளார்கள்.

அரசு வாகன ஓட்டுநர் நிர்வாகிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்த வேண்டும். என்னுடைய துறையில் கூட 150 ஓட்டுநர் காலிப் பணியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப முடியவில்லை. அதை நிரப்ப வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களால் பணியிடங்கள் அப்படியே உள்ளது.

இதுகுறித்து தெளிவு படுத்தினால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு ஓட்டுநர்களை தேர்வு செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும். அரசு ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிச்சயமாக பரிசீலிக்கும்.

நான் ஒருமணி நேரம் காரில் செல்கிற போது யார் யாரிடமோ பல விஷயங்களை பேசுவேன். காரில் செல்லும் போது எந்த விஷயத்தை பேசுவது எதன் நம்பிக்கையில் பேசுவது, மேலும் நான் பேசுவது எவ்வாறு வெளியே செல்கிறது என ஓட்டுநர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அதையெல்லாம் ஓட்டுநர்கள் சங்கம் சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்து பேசுகையில்,

ஓராண்டு காலத்தில் அத்தனை துறையிலும் பல்வேறு வகையால் வேலைவாய்ப்பு, பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளோம். கோடிக்கணக்கானை நிதி மூலம் தொழிற்சாலைகளை உருவாக்கி தந்துள்ளோம். என்னென்ன செய்தோம் என்பதை ஆதாரப்பூர்வமாக முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கினார்.

பத்தாண்டு காலம் செய்ய முடியாததை ஓராண்டு காலத்தில் செய்துள்ளோம். எந்தந்த வகையில் இடையூறு செய்தாலும் அதையெல்லாம் முறியடித்து தான் ஓராண்டு காலத்தில் முதல்வர் பணி செய்துள்ளார்.

மின்சாரம் கொடுக்க முடியவில்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள் என சி.டி.ரவி பேசியது குறித்த கேள்விக்கு, ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய மின் பகிர்வை கொடுக்கவில்லை. இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின் பகிர்வு பற்றாக்குறை குறித்து முதல்வர் தெளிவாக சட்டப்பேரவையில் விளக்கியுள்ளார். வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசுபவர்கள் தான் அவர்கள். நல்லது செய்ய வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.

திமுக விளம்பர ஆட்சி என எதிர்க்கட்சி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, எதிர்க்கட்சித் தலைவர் துணைத்தலைவர் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்துகொண்டே தெரியாதது போல பேசுகிறார்.

லூலூ மாலின் ஒரு செங்கல்லை கூட அனுமதிக்க மாட்டோம் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு, ஏன் செங்கல்லை போய் பிடிக்கப் போறாரா? அண்ணாமலை என்னென்னமோ சொல்கிறார்.

இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்ய தீர்மானம் நிறைவேற்றி உதவிகளை செய்ய முன்வந்தவர் முதல்வர். வாயில் சொல்வது எளிது ஆனால் சொன்னதை செய்பவர் முதல்வர். தமிழக முதல்வர் தான் தமிழக மக்களுக்கு செய்ய முடியும்.

தமிழ்நாடு பங்கீடு நிதிகளை பெற்றுக்கொண்டு உதாரணமாக 1ரூபாய் பெற்றுக்கொண்டு 35 பைசா தான் கொடுக்கின்றனர். வணிகவரித் துறையில் முழுமையான வரி வருவாயை கொடுத்தாலே தமிழக அரசு இன்னும் சேவை செய்யும்.

தமிழக பணத்தை பெற்றுக்கொண்டு அதை திருப்பிக் கொடுக்காமல் இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்வது வெறும் பேச்சு மட்டுமே. இன்னும் மத்திய அரசு 28 ஆயிரம் கோடி தர வேண்டிய நிதியை இன்னும் தரவில்லை.

என்னத்தாயவது பேசுகிறார்கள். வெறும் பேச்சு கதைக்கு ஒவ்வாது. பத்தாண்டுகளில் 6 லட்சம் கோடி கடன் வைத்து சென்றுவிட்டு அதற்கு நாங்கள் வட்டியும், கடனும் கட்டிக்கொண்டுள்ளோம்.

ஓராண்டுகாலத்தில் முதலமைச்சர் நிறைய பணிகளை செய்துள்ளார். அதற்கு இணையாக அவர்கள் என்ன செய்தார்கள் என சட்டமன்றத்தில் பேச சொல்லுங்கள் என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com