சென்னையில் கனமழை பெய்து 4 நாட்களாகியும் வேளச்சேரி பகுதியில் வெள்ளம் முழுவதுமாக வடியவில்லை. இதனிடையே, மழை பாதிப்பு தொடர்பாக பேட்டியளித்த அந்த தொகுதியின் எம்.எல்.ஏ அசன் மௌலானா, மழை வெள்ளம் என்பது இயற்கை சீற்றம் என்றும் இதனை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்.
இந்நிலையில், வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள டான்சி நகர் பகுதியை பார்வையிட சென்ற எம்.எல்.ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை சமாளிக்க முடியாமல் அசன் மௌலானா அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.