துப்புரவு பணியாளர்களை சாதி ரீதியாக துன்புறுத்துவதையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் கைவிடுமாறு நீதிகேட்டு தேனி பங்களாமேட்டில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி நகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள பங்களாமேட்டில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் மாநில இணைச் செயலாளர் ஜெகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர், நிறுவனத் தலைவர், சட்ட ஆலோசகர் பொருளாளர், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏனையோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்புரவு பணியாளர்களை சாதி ரீதியாக துன்புறுத்துவதையும், பழி வாங்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறும் நீதிகேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.