மேலும், “நூறுநாள் வேலைத்திட்டத்தில் நூறுநாட்கள் முழுமையாக பணி தருவதில்லை. இந்த ஆண்டிற்கான நூறுநாள் வேலைத்திட்டம் வரும் மார்ச் மாதத்துடன் முடியவுள்ள நிலையில், 100 நாட்கள் பணி தரவேண்டிய நிலையில் தற்போது முப்பது முதல் நாற்பது நாட்கள் மட்டுமே பணி தந்துள்ளனர். எனவே 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக நம்பி உள்ள மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். நான்கு மணிநேரம் செய்யவேண்டிய வேலைக்கு பதிலாக நாள்முழுவதும் காத்திருக்க வைக்கின்றனர்” எனவும் அவர் குற்றம் சாட்டினார்.