(கோப்பு புகைப்படம்)
பல மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இநிந்லையில் இந்த விவகாரத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தன. இந்நிலையில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.