சிறந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பரிசு: உணவுத்துறை அமைச்சர்

சிறந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பரிசு: உணவுத்துறை அமைச்சர்
சிறந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு பரிசு: உணவுத்துறை அமைச்சர்

மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் 12 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார். அதில், மாநில அளவில் சிறப்பாக பணியாற்றும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.



இதேபோல் சிறந்த எடையாளர்களுக்கும் முறையே 10 ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அவர் கூறினார். அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் புனரமைப்புப் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com