சென்னை சூளைமேடு உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாஷினி

சென்னை சூளைமேடு உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாஷினி

சென்னை சூளைமேடு உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாஷினி
Published on

தவறு செய்தவர்கள்‌ மீது எந்த பாகுபாடும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கை பிரித்திகா யாஷினி தெரிவித்துள்ளார். பயிற்சி முடித்து சென்னை சூளைமேடு உதவி ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பின் இதனை அவர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி. இவர் கடந்த கடந்தாண்டு காவ‌லர் தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆய்வாளராக தேர்வானார். வண்டலூரில் பயிற்சி முடித்து பின்னர் தருமபுரி காவல் நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தார். இறுதியாக 244 காவல் உதவி ஆய்வாளர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தனர். அதில் திருநங்கை பிரித்திகாவும் ஒருவர். பயிற்சி முடித்த 244 பேருக்கும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருநங்கை பிரித்திகா யாசினி, சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சூளைமேடு உதவி ஆய்வாளராக பிரித்திகா யாஷினி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் புதிய தலைமுறையிடம் பேசிய அவர், " சிறு வயதில் இருந்தே காவல்துறையில் பணிபுரிய விருப்பம் இருந்ததே அந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம். அதுமட்டுமின்றி திருநங்கை சமுதாயத்திற்கு ஒரு ரோல் மாடலாகவும் இருக்க விரும்பினேன். சட்டத்திற்கு உட்பட்டு மக்களுக்கு எந்தவகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டுமோ.. எந்த வகையில் செயல்பட வேண்டுமோ அந்த வகையில் செயல்படுவேன்" என்றார்.

தமிழக காவல் துறையில் இணைந்து பணியாற்ற வந்துள்ள பிரித்திகா யாஷினிக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று சூளைமேடு காவல் ஆய்வாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிரித்திகா யாஷினி சிறப்பாக பணி மேற்கொள்ள அனைத்து விதமான ஊக்குவிப்பும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவிலேயே மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் காவலராக பணி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com