சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி

சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி
சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி

ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி.

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த இந்திரகுமாரிக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதால் சிகிச்சையளிக்க முடிவெ செய்யப்பட்டுள்ளது.

1991 -96 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் இந்திரகுமாரி சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரின் கணவர் பாபு மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாகக்கூறி அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரின் கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து இன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com